சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.033
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கணை நீடு எரி, மால், பண் - தக்கராகம் (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=H3fxoFq9P1A |
5.080
திருநாவுக்கரசர்
தேவாரம்
வானம் சேர் மதி சூடிய பண் - திருக்குறுந்தொகை (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=w9O2L8OtDVo |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.033  
கணை நீடு எரி, மால்,
பண் - தக்கராகம் (திருத்தலம் திருஅன்பில் ஆலந்துறை ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி )
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா, இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம், அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே. | [1] |
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி, விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்- கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே. | [2] |
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து, பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே. | [3] |
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல் நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே. | [4] |
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல், கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் மாடு முழவம் அதிர, மட மாதர் ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே. | [5] |
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால் ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்- வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே. | [6] |
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை, கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும் அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே. | [7] |
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி, படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி, கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே. | [8] |
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும், பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை; சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம் அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே. | [9] |
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர், நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல் வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே. | [10] |
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.080  
வானம் சேர் மதி சூடிய
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருஅன்பில் ஆலந்துறை ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்திவாகீசர் திருவடிகள் போற்றி )
வானம் சேர் மதி சூடிய மைந்தனை நீ, நெஞ்சே!-கெடுவாய்-நினைகிற்கிலை; ஆன் அஞ்சு ஆடியை, அன்பில் ஆலந்துறைக் கோன், எம் செல்வனை, கூறிட கிற்றியே! | [1] |
காரணத்தர், கருத்தர், கபாலியார், வாரணத்து உரி போர்த்த மணாளனார்- ஆரணப்பொருள், அன்பில் ஆலந்துறை, நாரணற்கு அரியான் ஒரு நம்பியே. | [2] |
அன்பின் ஆன் அஞ்சு அமைந்து, உடன் ஆடிய என்பின் ஆனை உரித்துக் களைந்தவன், அன்பிலானை, அம்மானை, அள் ஊறிய அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே. | [3] |
சங்கை, உள்ளதும்; சாவதும் மெய்; உமை- பங்கனார் அடி பாவியேன், நான் உய; அங்கணன், எந்தை, அன்பில் ஆலந்துறைச் செங்கணார், அடிச் சேரவும் வல்லனே? | [4] |
கொக்கு இற(ஃ)கர், குளிர்மதிச் சென்னியர், மிக்க(அ) அரக்கர் புரம் எரிசெய்தவர், அக்கு அரையினர், அன்பில் ஆலந்துறை நக்க உரு(வ்) வரும், நம்மை அறிவரே. | [5] |
வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக் கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்; அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை உள்ள ஆறு அறியார், சிலர் ஊமரே. | [6] |
பிறவி மாயப்பிணக்கில் அழுந்தினும், உறவுஎலாம் சிந்தித்து, உன்னி உகவாதே, அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை மறவாதே, தொழுது, ஏத்தி வணங்குமே! | [7] |
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா அணங்கன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை வணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே! | [8] |
பொய் எலாம் உரைக்கும் சமண்சாக்கியக்- கையன்மார் உரை கேளாது எழுமினோ! ஐயன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை மெய்யன், சேவடி ஏத்துவார் மெய்யரே. | [9] |
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று மலங்க மாமலைமேல் விரல் வைத்தவன், அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே. | [10] |